கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-03-19 20:50 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 65). விவசாயி. இவர் அதே ஊரைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவரது விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டார் தொட்டியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்த பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்