நாசரேத்தில் வீட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

நாசரேத்தில் வீட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.

Update: 2021-03-20 17:11 GMT
நாசரேத், மார்ச்:
நாசரேத் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் துரை சிங் (வயது 71). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பாக்கியவதி. இவர்களுடைய 2 மகன்களும் வெளியூரில் வசித்்து வருகின்றனர். கடந்த 12-ந் தேதி இரவு இவர்கள் வீட்டை பூட்டி விட்டு மூத்த மகனின் பிள்ளைகளை கவனிப்பதற்காக சென்னை சென்று விட்டனர். வீட்டை இவரது உறவினர் ஜான்சன் என்பவர் கவனித்து வந்தார். கடந்த 14-ந் தேதி ஜான்சன், துரைசிங் வீட்டிற்கு சென்றபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே 2 பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜான்சன், துரைசிங்கிற்கும், நாசரேத் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். பி்ன்னர் சென்னையில் இருந்து திரும்பி வந்த துரைசிங் வீட்டை சோதனையிட்ட போது பீரோவில் வைத்திருந்த சுமார் 3 பவுன் நகைகளும், ரூ.25 ஆயிரமும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்