உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு எஸ்.புதூர் அருகே கரியாம்பட்டி கிராமத்தில் உள்ள புதுக்கண்மாய் வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் எஸ்.புதூர் தானம் அறக்கட்டளை மற்றும் ஆக்ஸிஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இதற்கு வயலக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த சீரமைப்பு பணிக்கான பூஜை நடைபெற்றது. இதில் எஸ்.புதூர் வட்டார வயலக திட்ட நிர்வாகி செல்வமணி, வயலக பணியாளர் ராணி, ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.