நிலப்பிரச்சினை தகராறில் 2 விவசாயிகள் மீது வழக்கு

வடக்கன்குளம் அருகே நிலப்பிரச்சினை தகராறில் 2 விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-03-22 20:49 GMT
வடக்கன்குளம், மார்ச்:
பழவூர் அருகே மாடன்பிள்ளைதருமம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணி (வயது 59), ரமேஷ் (46). விவசாயிகளான இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இவர்களுக்கு இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் காயம் அடைந்த மணி, ரமேஷ் ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், மணி, ரமேஷ் ஆகிய 2 பேர் மீதும் பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்