தர்மபுரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-23 18:26 GMT
தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாலம்மாள் (வயது 56). சம்பவத்தன்று இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலம்மாள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்