பாகனேரி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிவன் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், தேன், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் சிவலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.