மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி சாவு

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-03-28 19:19 GMT
க.பரமத்தி,
ஈரோடு மாவட்டம், சிலுவம்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று இரவு சிலுவம்பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கரூர் மாவட்டம் கொளந்தபாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கொடுமுடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் காமராஜபுரத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மீது தேவராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. 
இதில் படுகாயமடைந்த தேவராஜ் மற்றும் ஜெகநாதனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தேவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஜெகநாதன் மட்டும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்