அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் பகுதி பெரிய ஊர்சேரியை சேர்ந்த செல்வம் (வயது51) என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்குள்ள கண்மாய் கரைமறைவில் வைத்து கஞ்சா விற்ற செல்வத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.