சுத்தமல்லி அருகே விபத்தில் தொழிலாளி சாவு

சுத்தமல்லி அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2021-04-01 20:02 GMT
பேட்டை:

சுத்தமல்லி அடுத்த நடுக்கல்லூர் சி.ஆர். காலனியை சேர்ந்தவர் நெல்லையப்பன் மகன் முத்துக்குமார் (வயது 19). கூலித் தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்