மேலும் 12 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
மாவட்டத்தில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,897 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,617 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில்232 பேர் நோய் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர்.