8 பேர் மீது வழக்கு

இளையான்குடி அருகே தேர்தல் விதிமீறல் காரணமாக 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

Update: 2021-04-03 17:05 GMT
இளையான்குடி, 

இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தேர்தல் விதிமுறை மீறி சுவரொட்டி ஒட்டி உள்ளனர். இது குறித்து தேர்தல் பறக்கும் படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுரு, இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த லண்டன் குமார், செல்லப்பாண்டி, சன்னாசி, ராஜசேகரன் ஆகிய 4 பேர் மீதும் தி.மு.க.வை சேர்ந்த முருகன், தட்சிணாமூர்த்தி, மலைச்சாமி, மகேஷ் குமார் ஆகிய 4 பேர் மீதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்