அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேர் கைது

காரில் ஆயுதம் கொண்டு சென்ற அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-03 17:50 GMT
சிவகங்கை,

காரில் ஆயுதம் கொண்டு சென்ற அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

சிவகங்கை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் செல்வமணி (வயது 49). இவர் சிவகங்கையை அடுத்த பெரியகோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் தேர்தல் பிரசார பணிகளை முடித்துவிட்டு இரவு 11.45 மணி அளவில் தன்னுடைய காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
சிவகங்கை நகர் எல்லையில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி வழியாக அவர் சென்ற போது அங்கிருந்த போலீசார் அவர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது காரில் பின் பக்க சீட்டின் அடியில் வாள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.

2 பேர் கைது 

இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தி கொடுத்த புகாரின் பேரில் நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி ஒன்றிய செயலாளர் செல்வமணி மற்றும் கார் டிரைவர் வேல்மணி (29) ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்