இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள பெரியவண்டாலை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் முருகன் (வயது 48). அதே பகுதியை சேர்ந்த முத்தழகு மகன் காளை. இவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் நிலம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த நிலையில் சம்பவத்தன்று முருகனை ஒரு சிலர் தாக்கி உள்ளனர். அதே போல் அதே ஊரை சேர்ந்த காளையின் உறவினர் பாண்டியம்மாளையும் ஒரு சிலர் தாக்கி உள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்