பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்
பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்.
அச்சரப்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பெரும் பேர்கண்டிகையில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தடுத்தாட்கொண்ட நாயகி, தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று சசிகலா வருகை தந்தார். தான்தோன்றீஸ்வரருக்க கோமடி சங்கால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டார். ரணபத்ரகாளி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
முன்னதாக பெரும் பேர் கண்டிகை மலை மீது தெற்கு நோக்கி அமைந்துள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சிவசுப்ரமணியர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.