திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை

திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-05 19:47 GMT
திருச்சி
திருச்சி தென்னூர் ஆட்டுமந்தை தெருவைச் சேர்ந்தவர் சுலைமான். இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனையில்  இருந்து வந்தார். இந்தநிலையில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில், பழங்களை பழுக்க வைக்கும் ரசாயன மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தில்லை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகள்