கொல்லிமலை விளாரம் கிராமத்தில் வனப்பகுதியில் திடீர் தீ

வனப்பகுதியில் திடீர் தீ

Update: 2021-04-07 00:48 GMT
சேந்தமங்கலம்:
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் தேவானூர் நாடு ஊராட்சியில் விளாரம் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் இருந்து சேத்தூர் கிராமம் செல்லும் வழியில் வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதில் பல்வேறு ரக மரங்கள், செடி- கொடிகள் எரிந்து சாம்பலானது. இதை அறிந்த கொல்லிமலை வனத்துறை அலுவலர்கள் அங்கு விரைந்து சென்று அந்த தீயை அணைத்தனர்.

மேலும் செய்திகள்