ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொரோனா ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொரோனா ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி.

Update: 2021-04-07 04:10 GMT
சென்னை, 

தமிழக அரசின் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் சகாயம் (வயது 58). சமீபத்தில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அவரது ஆதரவாளர்கள் 36 தொகுதிகளில் போட்டியிட்டனர்.

இதற்கிடையே சகாயத்துக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர் நேற்று ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே அவரை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்