அறந்தாங்கி அருகே வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது

வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-07 18:50 GMT
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே உள்ள ஆலங்குடி பஞ்சாத்தி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). டிரைவரான இவர் நேற்று முன்தினம் வாக்குச்சாவடிக்குள்  புகுந்து வி.வி.பேட் எந்திரத்தை உடைத்துள்ளார். இதனையடுத்து அங்கு இருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் அவரை பிடித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்