வாகனம் மோதி அ.தி.மு.க. பிரமுகர் சாவு

வாகனம் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்

Update: 2021-04-07 19:02 GMT
வாடிப்பட்டி
வாடிப்பட்டி மின்வாரிய அலுவலகம் எதிரில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மதுரை-திண்டுக்கல் தேசியநான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து அதிகாலை நேரம் நடந்ததால் தொடர்ந்து சென்ற வாகனங்கள் அவரது தலைபகுதியில் ஏறி சென்றதால் உருக்குலைந்து முகம் சிதைந்து காணப்பட்டது. வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். அந்த வேட்டியில் அ.தி.மு.க. கரை போடப்பட்டு இருந்து. அதனால் அவர் அ.தி.மு.க. பிரமுகர் என்று தெரியவந்தது. ஆனால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது சம்மந்தமாக சின்னமநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாண்டி கொடுத்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்