தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

கூடங்குளம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-07 19:10 GMT
கூடங்குளம், ஏப்:
கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமம் மேல தெருவை சேர்ந்த ராஜ கித்தேரி ஆன் என்பவர் மகன் பெட்னட் (வயது 28). கடல் தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பெட்னட், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்