களை கட்டிய மீன்பிடி திருவிழா

கொளுஞ்சிப்பட்டியில் மழை வேண்டி கிராம மக்கள் மீன்பிடி திருவிழா நடத்தினர்.

Update: 2021-04-07 20:16 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கொளுஞ்சிப்பட்டியில் மழை வேண்டி கிராம மக்கள் மீன்பிடி திருவிழா நடத்தினர். கண்மாய் தண்ணீரில் துள்ளி ஓடிய மீன்களை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆவலுடன் சாக்குப்பையில் சேகரித்த போது எடுத்த படம். மீன் கிடைக்காதவர்களுக்கும், அக்கம், பக்கத்தினர் கண்மாயில் தேடி மீன்களை சேகரித்து கொடுத்து ஒருவருக்கொருவர் மகிழ்ந்த தருணங்களால் மீன்பிடி திருவிழா களை கட்டியது.

மேலும் செய்திகள்