சிங்கப்பூர், துபாய் விமானங்கள் தாமதம் பயணிகள் அவதி
சிங்கப்பூர், துபாய் விமானங்கள் திருச்சிக்கு வர தாமதம் ஆனதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
செம்பட்டு
சிங்கப்பூரில் இருந்து நேற்று மாலை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு 6.35 மணிக்கு வர வேண்டும். அதற்கு பதிலாக சுமார் 2½ மணி நேரம் தாமதமாக இரவு 9.10 மணிக்கு வந்து சேர்ந்தது. இதுபோல் துபாயில் இருந்து மாலை 6.30 மணிக்கு திருச்சிக்கு வர வேண்டிய விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக இரவு 8.40 மணிக்கு வந்தடைந்தது. இதனால் இந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.