திருநங்கைகளுடன் இருந்த 2 வாலிபர்கள் கைது

திருநங்கைகளுடன் இருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-08 20:36 GMT
2 பேர் கைது
துடியலூர்,

பெரியநாயக்கன்பாளையம் அருகே  கூ. கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த  சம்பத் மற்றும் அவரது நண்பர் செல்வராஜ் ஆகியோர்  கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் வந்தபோது, 2  வாலிபர்கள் திருநங்கைகளுடன்  தகாத முறையில் இருந்துள்ளனர். 

இதனை சம்பத், செல்வராஜ் ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனைதொடர்ந்து அந்த வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர். சம்பத்திடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், அவர்கள் கோவை இருட்டுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது 21 ), பி.கே புதூர் பகுதியைச் சேர்ந்த செல்ல குமார் (எ) மோகன்  ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்