முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Update: 2021-04-09 17:29 GMT
அவினாசி
கொரோனா தொற்று பரவலை தடுக்க அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக பேருராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து அவினாசி புது பஸ் நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே முக கவசம் அணியாமல் கார், இரு சக்கர வாகனத்தில் வருபவர்களையும் - நடந்து செல்பவர்களையும் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் வசூலித்தனர். வேனில் சுற்றுலா சென்றவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சென்றதாக வேன் ஓட்டுனருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் 34 பேரிடமிருந்து ரூ.8 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டதாக பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சொக்கநாதன் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்