கோவை விளாங்குறிச்சி பகுதியில் ஒருவர் கைது; 2பேர் தலைமறைவு

ஒருவர் கைது 2பேர் தலைமறைவு

Update: 2021-04-10 00:39 GMT
கைது
சரவணம்பட்டி
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஓரு ஹாஸ்டலில் பெண்களை வைத்து விபசாரம் நடத்துவது சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

உடனே  அங்கு சென்று விசாரணை நடத்தியதில் கோவையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பாலாஜி என்பவர் சிங்காநல்லூரை சேர்ந்த சிவா, முருகேசன் ஆகியோர் மூலம் பெங்களூரு மற்றும் மும்பையை சேர்ந்த 4 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததை உறுதி செய்தனர்.

 அதனைத்தொடர்ந்து முருகேசனை கைது செய்து 4 பெண்களையும்  மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்