திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-04-10 04:44 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால் மற்றும் மருத்துவர்கள் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்