பட்டாசு வியாபாரி தற்கொலை

பட்டாசு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

Update: 2021-04-10 19:07 GMT
சிவகாசி, 
சிவகாசி சாட்சியாபுரம் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). இவர் சிவகாசியில் பட்டாசு கடையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது அண்ணன் சந்திரன் திருத்தங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்