முதியவர் விஷம் குடித்து தற்கொலை

ஆலங்குளம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-11 19:43 GMT
ஆலங்குளம், ஏப்:
ஆலங்குளம் அருகே உள்ள கண்டப்பட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 68). தனியாக வசித்து வந்த இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் மகள் ரோஸ்லின் சரோஜா பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் பக்கவாதத்தால் வேலை செய்ய முடியாமல் இருந்ததால் மன உளைச்சலில் காணப்பட்ட தர்மராஜ் விஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தர்மராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்