வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு

மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், பணம் திருடப்பட்டது.

Update: 2021-04-12 16:56 GMT
மதுரை, 

மதுரை வள்ளுவர் காலனி, வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 71). இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 800 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 32 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. உடனே அவர் இது குறித்து கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்