ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் சிக்கினார்
அரசு கொள்முதல் நிலையத்தில் ெநல் மூடைகளை கொள்முதல் செய்த ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை மதுரையில் வைத்து சிவகங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சிவகங்கை,
அரசு கொள்முதல் நிலையத்தில் ெநல் மூடைகளை கொள்முதல் செய்த ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை மதுரையில் வைத்து சிவகங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நெல் கொள்முதல் நிலையம்
இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் மகேஸ்வரன் (வயது 45) என்பவர் கணக்காளராக பணிபுரிகிறார். இவர் தரும் ரசீதின் அடிப்படையில் தான் விவசாயிகளின் வங்கி கணக்கில் எத்தனை மூடை நெல் கொடுத்துள்ளார்களோ அதற்குரிய பணம் செலுத்தப்படும்.
லஞ்சம் கேட்டார்
பின்னர் பேரம் பேசியதில் ரூ.16 ஆயிரத்து 400 கொடுத்தால் போதும் என்று கூறி உள்ளார். இது குறித்து அருளானந்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து அருளானந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்த மகேஸ்வரனிடம் கொண்டு சென்று லஞ்சமாக கேட்ட பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமன்னன், இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு, சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார், மகேஸ்வரனை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.