பெண் மாயம்

பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-04-12 20:09 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள காக்காபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன். இவருடைய மகள் ஸ்ரீகலா(வயது 17). இவர் சுத்தமல்லியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர், பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஸ்ரீகலாவின் தாய் சுசீலா உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மாயமான ஸ்ரீகலாவை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்