ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-12 20:09 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,955 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 4,787 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 119 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்