திரைப்பட இயக்குனரை கைது செய்யக்கோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு

திரைப்பட இயக்குனரை கைது செய்யக்கோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர்.

Update: 2021-04-12 20:12 GMT
தாமரைக்குளம்:
தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கத்தை சேர்ந்தவர்கள் மாநில துணை தலைவர் கலியபெருமாள், மாவட்ட தலைவர் சேட்டு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, ஒரு மனு அளித்தனர். அதில், மருத்துவ சமுதாய மக்களை இழிவுபடுத்தி மண்டேலா என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சக்கரவர்த்தி ராமச்சந்திரன் மற்றும் இயக்குனர் வடவனம் அஸ்வின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும். அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ சமுதாய மக்கள் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே தமிழக அரசு உடனடியாக அவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்