அம்மாபேட்டை பகுதியில் ஆடு திருடியவர் கைது

அம்மாபேட்டை பகுதியில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-12 22:40 GMT
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சி பகுதியில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மதுக்கடை அருகே சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்தபோது அவர் ஒரிச்சேரிபுதூர் சத்தி மெயின் ரோட்டில் வசித்து வரும் மாணிக்கம் மகன் துரைசாமி (வயது 23) என்பதும், அவர் அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவு பகுதியில் தனது மனைவியுடன் குடியிருந்து வருவதும், வாழை இலை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் அவர் அம்மாபேட்டை, வெள்ளித்திருப்பூர், ஆப்பக்கூடல், அந்தியூர், திங்களூர், சிறுவலூர், கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளில் ஆடு திருடியதை ஒப்புக்கொண்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைசாமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்