திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-04-13 15:55 GMT
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரை அடுத்த தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மனைவி கவுரி(வயது 25). இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தீபன்(3), தீபிகா(1) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் சென்னையில் தங்கி செங்கல் அறுக்கும் வேலை செய்து வந்த கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தனர். அப்போது திடீரென கவுரி வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கவுரி பரிதாபமாக இறந்தார்.  வரதட்சணை கொடுமையால் கவுரி தற்கொலை செய்து கொண்டதாக அவரது அண்ணன் கந்தன் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்