ரெயில் மோதி மூதாட்டி சாவு

திண்டிவனத்தில் ரெயில் மோதி மூதாட்டி உயிாிழந்தாா்.

Update: 2021-04-13 16:43 GMT
திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் காலனியை சேர்ந்தவர் துரைக்கண்ணு மனைவி கோதை (வயது 80). இவர் நேற்று காலை சாரம் பகுதியில் ரெயில்வே பாதையை கடக்க முயன்றார். 

அப்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்  கோதை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு ரெயில்வே இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ரெயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்