மோட்டார் சைக்கிளுடன் விழுந்தவர் சாவு

மோட்டார் சைக்கிளுடன் விழுந்தவர் பலியானார்.

Update: 2021-04-13 17:47 GMT
திருமயம், ஏப்.14-
திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவர் இளஞ்சாவூர் கிராமத்தில் இருந்து திருமயத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மணவாளன் கரை விளக்கு ரோடு அருகே வந்த போது எதிரே நடந்து வந்த வெங்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் (34) மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த  கண்ணன் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.பழனியப்பன்  லேசான காயத்துடன் தப்பினார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்