விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்

Update: 2021-04-14 19:04 GMT
கொட்டாம்பட்டி
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடியை சேர்ந்தவர் குமரப்பன்(வயது 47). எலக்ட்ரீசியன். அதே ஊரைச்சேர்ந்தவர் சுரேஷ். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளனர். கொட்டாம்பட்டியை அடுத்துள்ள வெள்ளாலபட்டி அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு குமரப்பன், சுரேஷ் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் குமரப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்