திருப்பனந்தாள் அருகே ஆற்றங்கரையில் முதியவர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

திருப்பனந்தாள் அருகே ஆற்றங்கரையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-04-15 16:38 GMT
திருப்பனந்தாள், 

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே சூரியனார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

அவருடைய உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மாதவன் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருப்பனந்தாள் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலையா?

உடலின் அருகே விஷ மருந்து பாட்டில் மற்றும் மது பாட்டிலும் கிடந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்