கோவில்பட்டி, கயத்தாறில் இடி-மின்னலுடன் பலத்த மழை

கோவில்பட்டி, கயத்தாறில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2021-04-15 16:45 GMT
கோவில்பட்டி, ஏப்:
கோவில்பட்டி, கயத்தாறில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

கோவில்பட்டியில் நேற்று மாலை 3.20 மணி முதல் 4.50 மணி வரை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வாறுகால்களிலும், தெருக்களிலும் வெள்ளமாக ஓடியது. இதனால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
கோவில்பட்டி மெயின் ரோடு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. 
இதனால் ஓடைகளில் மழைநீர், கழிவுநீர் வெள்ளமாக ஓடி மூப்பன்பட்டி கண்மாய்க்கு சென்றது.

கயத்தாறு

இதேபோல் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி அடைந்தது. மேலும் ஆடு, மாடுகள் குடிப்பதற்கு குளம் குட்டைகளில் தண்ணீர் ஓரளவிற்கு நிரம்பியது.
இப்பகுதி வானம் பார்த்த பூமியாக இருப்பதால், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்