48 பேருக்கு கொரோனா தொற்று

48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

Update: 2021-04-15 18:28 GMT
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 48 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 133 பேர் சிகிச்சையில் இருந்தனர். இவர்களில் குணமடைந்த 13 பேர் நேற்று சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்