மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தந்தை,மகன் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-04-16 16:52 GMT
திருப்புவனம், 
தூத்துக்குடி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள பத்திநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது28). இவரது தந்தை பெயரும் நாராயணன் (62), தம்பி நவீன் (26). இவர்கள் மதுரை பைக்கரா பகுதியில் உள்ள விவேகானந்தா நகரில் குடியிருந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள தங்களது குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். சாமி கும்பிட்டுவிட்டு மகன் நாராயணன் காரிலும், தந்தை நாராயணன், தம்பி நவீன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி வந்துள்ளனர். படமாத்தூர் விலக்கு அருகே எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த தந்தை, மகன் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்