தர்மபுரி மாவட்டத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-04-17 16:59 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
94 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று 94 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
651 ஆக அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 589 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 32 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதற்கிடையே புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 651 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்