கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், மடிக்கணி திருட்டு

கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், மடிக்கணி திருடப்பட்டுள்ளது.

Update: 2021-04-17 18:15 GMT
கரூர்
கரூர் தாந்தோணிமலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவர் தெற்கு காந்திகிராமத்தில் உள்ள சாய்பாபா நகரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறப்பதற்காக சதீஷ்குமார் வந்தபோது கடையின் ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த 3 செல்போன்கள், ஒரு மடிக்கணினி மற்றும் ரூ.9 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது ெதரியவந்தது. இதுகுறித்து சதீஷ்குமார் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்