மேலும் 81 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 33 ஆக உயர்ந்தது.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 39 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர்.
இதுவரை பாதிப்பில் இருந்து 17 ஆயிரத்து 323 பேர் மீண்டுள்ளனர்.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 502 ஆக உயர்ந்தது