கீழடியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது

7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது கீழடியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது.

Update: 2021-04-19 18:18 GMT
 
திருப்புவனம்,

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றிவரும் சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் ஏற்கனவே 2 குழிகள் தோண்டப்பட்டன. இதில் ஓடுகள், சேதமுற்ற நிலையில் பானைகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள், பாசி, மணிகள் உள்ளிட்ட பல பழங்கால பொருட்கள் கிடைத்தன. கொந்தகை, அகரத்திலும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கின்றன.இந்த நிலையில் கீழடியில் அகழாய்வுக்காக 3-வதாக ஒரு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகள்