மோட்டார் சைக்கிள் திருட்டு போலீசில் புகார்
மோட்டார் சைக்கிளில் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது
கரூர்
கரூர் ரெயின்போ நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் கரூர் கவுரிபுரத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பின்னர் வந்து பார்த்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.