கோவில் குளத்தில் டைல்ஸ் தொழிலாளி பிணம் தவறி விழுந்தாரா? தற்கொலையா? போலீசார் விசாரணை

மயிலாடுதுறை கோவில் குளத்தில் டைல்ஸ் தொழிலாளி பிணம் தவறி விழுந்தாரா? தற்கொலையா? போலீசார் விசாரணை.

Update: 2021-04-23 18:28 GMT
மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை திருவிழந்தூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரத்தினம் மகன் பிரான்சிஸ் (வயது 48). இவர் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மனைவியிடம் சண்டையிட்டுவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் அவரது குடும்பத்தினர் பிரான்சிஸ்சை தேடியுள்ளனர். ஆனாலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று மதியம் திருவிழந்தூர் பரிமள ெரங்கநாதர்கோவில் குளத்தில் ஆண் ஒருவரின் பிணம் மிதப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தவர் காணாமல் போன பிரான்சிஸ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரான்சிஸ் குளத்தில் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்