ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிண
ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
கரூர்
கரூர் மாவட்டம், மாயனூர்- மகாதானபுரம் இடையே உள்ள ெரயில் தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடப்பது கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி திருநாவுக்கரசு (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, திருநாவுக்கரசு எதற்காக இங்கு வந்தார்?, ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.