திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-26 19:58 GMT
கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி கலைவாணி (வயது 23). இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலைவாணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலைவாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் செய்திகள்